Advertisement

ஆர்சிபி-ன் அடுத்த கேப்டன் யார்? ஆகாஷ் சோப்ராவின் தேர்வு!

ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யார் செயல்படுவார் என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 20, 2021 • 12:17 PM
Who is the next captain of RCB? Akash Chopra's choice!
Who is the next captain of RCB? Akash Chopra's choice! (Image Source: Google)
Advertisement

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டி20 உலகக்கோப்பையுடன் இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிலிருந்து விலகுவதாக அறிவித்த அதிர்ச்சியிலிருந்தே ரசிகர்கள் மீளாத நிலையில், தற்போது ஆர்சிபி அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதனால் அவர் அடுத்த ஆண்டிலிருந்து ஆர்சிபி அணியின் வீரராக மட்டுமே விளையாடுவார். இந்நிலையில், கோப்டன் கோலி பதவி விலகுவதை அடுத்து, ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. 

Trending


அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சேப்ரா,  'கூ செயலி' யில் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக யாரைத் தேர்வு செய்வீரர்கள் என்ற கேள்வியுடன் ஏபிடி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வேல் ஆகியோரை தேர்ந்தெடுத்து வாக்கெடுப்பினை நடத்தியுள்ளார். 

 

இதில் அதிகபடியான ரசிகர்கள் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டனாக ஏபிடி வில்லியர்ஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இன்னும் சிலர் மேக்ஸ்வெல்லிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இருப்பினும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் தேர்வு செய்யப்படுவார் என்ற கருத்தும் பரவிவருவது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement