
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கும் ரோஹித் சர்மா தலைமையிலா 18 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) நேற்று (அக்டோபர் 25) அறிவித்தது. அந்தவகையில் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 15 ஆம் தேதி பெர்த்தில் தொடங்கும் நிலையில் அடுத்தாடுத்த போட்டிகள் அடிலெய்டு, பிரிஸ்பேன், மெல்போர்ன் மற்றும் சிட்னியில் போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள் அபிமன்யூ ஈஸ்வரன், ஹர்ஷித் ரானா மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்கள் சிலரும் தங்கள் இடங்களை இழந்துள்ளனர். அந்தவகையில், முகமது ஷமி மற்றும் அக்சர் படேல் தவிர, டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாத மற்றொரு நட்சத்திர வீரர் குல்தீப் யாதவ்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் குல்தீப் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பிடித்து விளையாடியதுடன், அதில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார். ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, அவருக்கு மற்றாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்கப்படாமல் இருந்தது.