
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது பேட்டிங் செய்கையில் முழங்காலில் காயம் அடைந்த ரோகித் சர்மா போட்டியின் கடைசி நாளில் பீல்டிங் செய்ய வரவில்லை. மேலும் ரோஹித்தின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி நாளில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவருக்கு பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்வார் என்றும் பிசிசிஐ அதிகாரபூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
அவர் தவிர புஜாராவும் தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடைசி நாள் போட்டியில் பீல்டிங் செய்யவில்லை. இந்த இருவரது காயம் காரணமாக இவர்கள் இருவரும் அடுத்த 5ஆவது போட்டியில் விளையாடுவார்களா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 10ஆம் தேதி இறுதி டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது.
புஜாரா பீல்டிங் செய்ய வரவில்லை என்றாலும் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்றும் அவரால் நிச்சயம் அடுத்த போட்டியில் விளையாட முடியும் என்று தகவல் வெளியானது. ஆனால் ரோகித் சர்மா அடுத்த போட்டியில் விளையாட முடியுமா ? என்பது சந்தேகமாகியுள்ள நிலையில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து தற்போது பேசிய ரோகித் சர்மா ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.