Advertisement

மகளிர் பிரீமியர் லீல் 2023: பிப்.13இல் வீராங்கனைகள் ஏலம்!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 07, 2023 • 20:14 PM
Women's Premier League 2023 Player Auction List Announced
Women's Premier League 2023 Player Auction List Announced (Image Source: Google)
Advertisement

ஆடவருக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் மகளிருக்கான ஐபிஎல் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் மகளிருக்கான முதலாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'மகளிர் பிரீமியர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த 5 அணிகளின் ஏலம் மூலமாக பிசிசிஐ 4669.99 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 

Trending


மேலும், 5 அணிகள், ஒட்டுமொத்தமாக 22 ஆட்டங்கள், ஒவ்வொரு அணியிலும் 18 வீராங்கனைகள். ஆறு வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி. ஆட்டத்தில் விளையாடும் 11 வீராங்கனைகளில் 5 வெளிநாட்டு வீராங்கனைகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த 5 வீராங்கனைகளில் ஒரு வீராங்கனை அசோசியேட் நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். 

மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் நிறுவனம் பெற்றுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ரூ. 951 கோடிக்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் ரூ. 7.09 கோடி. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் (தொலைக்காட்சி, டிஜிட்டல்) பொருந்தும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. 

மகளிர் பிரீமியர் லீக் தொடர் மும்பையில் மார்ச் 4 முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் தொடக்க ஆட்டம் நடைபெறும். ஏலத்தில் பங்கேற்ற 1,525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில், இறுதிப்பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்படுள்ளனர். இதில் 246 இந்திய வீராங்கனைகளும், 163 வெளிநாட்டு வீராங்கனைகளும் வருகிற 13ஆம் தேதி மும்பையில் நடக்கும் ஏலத்தில் பங்கெபெறுவர் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

இதில், ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிரிதி மந்தனா, தீப்தி சர்மா, ஷெபாலி வர்மா உள்ளிட்ட முக்கியமான 24 வீராங்கனைகள் அதிகபட்சமான விலை ரூ.50 இலட்சத்திற்கு ரிசர்வ் செய்யப்பட்டுள்ளனர். இந்த வீராங்கனைகளின் ஏலம் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement