
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மேலும் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைக்கும் என்பதால் இப்போட்டியின் மீது கூடுதல் கவனமும் இருந்தது. இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜார்ஜியா பிளிம்மர் 17 ரன்களில் ஆட்டமிழக்க. அவரைத்தொடர்ந்து 28 ரன்களில் சூஸி பேட்ஸும் விக்கெட்டை இழந்தார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெர் 9 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்ப, நியூசிலாந்து மகளிர் அணி 58 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் புரூக் ஹாலிடே இணை நிதானமாக விளையாடி அணியின் விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரியையும் மெல்ல மெல்ல உயர்த்தினர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சோஃபி டிவைன் 25 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தர்.