Advertisement
Advertisement
Advertisement

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!

மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: சோஃபி டிவைன் அரைசதம்; இந்திய அணிக்கு 161 ரன்கள் இலக்கு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 04, 2024 • 09:15 PM

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைற்ற நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 04, 2024 • 09:15 PM

அதன்படி துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து மகளிர் அணிக்கு சூஸி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் சூஸி பேட்ஸ் 27 ரன்களைச் சேர்த்து தனது விக்கெட்டை இழந்தார். 

Trending

அவரைத்தொடர்ந்து மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ஜார்ஜியா பிளிம்மர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 34 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அமெலியா கெரும் 13 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் சோஃபி டிவைன் மற்றும் புரூக் ஹாலிடே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசி ஸ்கோரை உயர்த்தினர். 

இறுதியில் 16 ரன்கள் எடுத்த நிலையில் புரூக் ஹாலிடே தனது விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சோஃபி டிவைன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக் ரேனுகா சிங் 2 விக்கெட்டுகளையும், ஆஷா சோபனா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

Also Read: Funding To Save Test Cricket

 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement