
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 37ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களையும் விளாசினர். முதல் 10 ஓவர்களில் 91 ரன்களை இந்திய அணி குவித்திருந்த நிலையில், ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறியது. இதனால் இந்திய அணி நிதானமாக விளையாடி சிறந்த இலக்கை நிர்ணயித்தது.
அதன்பின் தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் பவுமா - டி காக் கூட்டணி களமிறங்கியது. இதில் சிராஜ் வீசிய 2வது ஓவரிலேயே டி காக் 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழந்தார். பின் கேப்டன் பவுமா - வான் டர் டஸன் கூட்டணி இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் 8 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 21 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருப்பதால், ரோஹித் சர்மா உடனடியாக பந்தை ஜடேஜா கைகளில் கொடுத்தார்.