-mdl.jpg)
Would be nicer if we make lesser mistakes: Babar Azam rues dropped catches in Asia Cup Final loss (Image Source: Google)
ஆசியக் கோப்பை 2022இன் இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் ஓபனர்கள் குஷல் மெண்டிஸ் 0, நிஷங்கா 8 ஆகியோர் சொதப்பினர். மற்ற டாப் வரிசை வீரர்களும் சொதப்பியதால் இலங்கை அணி 58 எனத் திணறியது. அடுத்து ராஜபக்சா 71 காட்டடி அடித்து அசத்தினார். தொடர்ந்து ஹசரங்கா 36 ரன்களை சேர்த்ததால் இலங்கை அணி 20 ஓவர்களில் 170 ரன்களை எடுத்தது.
அதன்பின்இலக்கை துரத்திக் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர் முகமது ரிஸ்வான் 55 , இஃப்திகார் அகமது 32 ஆகியோர் மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார்கள். பாபர் அசாம் 5 உட்பட மற்ற அனைத்து பேட்டர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்ததால் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களை குவித்தது.