
இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோதின. லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி தலா 12 புள்ளிகள் பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முன்னிலை பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதில் மும்பை அணி 2ஆவது இடத்தையும், யுபி வாரியர்ஸ் 3ஆவது இடத்தையும் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் முறையே 4ஆவது, 5ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.நேற்று முன்தினம் இரவு நடந்த எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில்யுபி வாரியர்சை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.