
WPL 2023: Royal Challengers Bangalore Announce Smriti Mandhana As Captain Of Women's Team (Image Source: Google)
மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான வீராங்கனைகளைத் தேர்வு செய்யும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. 30 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 87 பேர் ஏலத்தில் தேர்வானார்கள். மேலும் இத்தொடர் மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி, லக்னோ ஆகிய நகரங்களை முன்னிலைப்படுத்தும் அணிகள் போட்டியிடுகின்றன. மேலும் ஏலத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா அதிகபட்ச ஏலத்தொகைக்குத் தேர்வானார். ரூ. 3.4 கோடிக்கு ஆர்சிபி அணி அவரைத் தேர்வு செய்தது.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி ஆடவர் அணியின் நட்சத்திர பேட்டர்களான விராட் கோலியும், கேப்டன் ஃபாஃப் டு பிளெஸ்சிஸும் இத்தகவலை காணொளி வழியாக அறிவித்தனர்.