WPL 2025: ஹர்லீன் தியோல் அபாரம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

WPL 2025: ஹர்லீன் தியோல் அபாரம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்! (Image Source: Google)
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதேசமயம் அடுத்து களமிறங்கிய ஜெஸ் ஜோனசன் 9 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 4 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 14 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் மெக் லெனிங் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 15 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 92 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. குஜராத் ஜெயண்ட்ஸ் அணி மேகனா சிங் 3 விக்கெட்டுகளையும், டியான்டிரா டோட்டின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி மற்றும் தயாளன் ஹேமலதா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஹேமலதா ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பெத் மூனியுடன் ஜோடி சேர்ந்த ஹர்லீன் தியோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் இருவரும் இணைந்து 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில், அரைசதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி 6 பவுண்டரிகளுடன் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரைத்தொடர்ந்து ஹர்லீனுடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஆஷ்லெ கார்ட்னரும் தனது பங்கிற்கு ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 22 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்லீன் தியோல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டியான்டிரா டோட்டினும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 24 ரன்களில் டோட்டின் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய போப் லிட்ச்ஃபீல்டும் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricketஇதனால் குஜராத் அணி வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்லீன் தியோல் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களையும், காஷ்வி கௌதம் ஒரு சிக்ஸருடன் 9 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Advertisement
Win Big, Make Your Cricket Tales Now
கிரிக்கெட்: Tamil Cricket News