Advertisement

ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!

ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பேட்டிங் செய்த விதம், பார்க்க அற்புதமாக இருந்தது. அவர்களை இவ்வாறு விளையாடியதை பார்க்க அருமையாக இருந்தது என ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Advertisement
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா!
ரிச்சா கோஷ், எல்லிஸ் பெர்ரியை பாராட்டிய ஸ்மிருதி மந்தனா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 15, 2025 • 08:53 AM

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வதோதராவில் நடைபெற்ற இப்போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் ஜெயண்ட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 15, 2025 • 08:53 AM

அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது பெத் மூனி மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்த நிலையில் 201 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 3 பவுண்டரி, 8 சிஸர்கள் என 79 ரன்களையும், பெத் மூனி 56 ரன்களையும் சேர்த்தனர். 

Trending

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகள் சொதப்பிய நிலையில், எல்லிஸ் பெர்ரி 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 57 ரன்களையும், இறுதிவரை அதிரடியாக விளையாடிய ரிச்சா கோஷ் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்களையும், கனிகா அஹுஜா 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் வீழ்த்தியது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “இப்போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன். ரிச்சா கோஷ் மற்றும் எல்லிஸ் பெர்ரி பேட்டிங் செய்த விதம், பார்க்க அற்புதமாக இருந்தது. அவர்களை இவ்வாறு விளையாடியதை பார்க்க அருமையாக இருந்தது. எனெனில், அவர்கள் வலை பயிற்சியில் அதைத்தான் பயிற்சி செய்து வந்தனர். இப்போட்டியில் நாங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு இங்கு பனியின் தாக்கும் இருக்கும் என்பதால், பந்து வீசுறது கடினம் என்பதை உணர்ந்தோம். இதன் காரண்மாக இப்போட்டியில் நாங்கள் நீடிக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும். இத்தொடருக்கு முன் நாங்கள் சிறந்த வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்திருக்கிறோம். மேலும் இப்போட்டியில் காயமடைந்த வீராங்கனைகளுக்கு பதிலாக இடம்பிடித்த வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement