Advertisement

இலங்கை தொடருக்கான வியூகங்களை நாங்கள் இன்னும் வகுக்கவில்லை - புவனேஷ்வர் குமார்

பரிட்சையமில்லாத இலங்கை அணிக்கெதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை என இந்திய அணி துணைக்கேப்டன் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 16, 2021 • 22:28 PM
Yet To Plan Against Unknown Sri Lanka Squad, Says Bhuvneshwar Kumar
Yet To Plan Against Unknown Sri Lanka Squad, Says Bhuvneshwar Kumar (Image Source: Google)
Advertisement

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஜூலை 18ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதற்கிடையில் இத்தொடருக்கான தசுன் ஷானகா தலைமையிலான 24 பேர் கொண்ட இலங்கை அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. 

Trending


இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இன்று காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர்,“எங்களுடன் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள் குறித்து அவ்வளவாக எங்களுக்கு தெரியாது. சமீபத்தில் அவர்கள் இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சில இலங்கை வீரர்கள் சிறப்பாக விளையாடியதை எங்களால் காண முடிந்தது. 

அதனால் அவர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் வியூகங்களை வகுக்கவில்லை. அதேசமயம் நாங்களும் எங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement