
ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவை பெற்றுள்ள ஐபிஎல் தொடரில் இதுவரை 15 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. அடுத்த வருடத்திற்கான ஐபிஎல் தொடர் வழக்கம் போல் ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் ஆல் ரவுண்டர்களுக்கான ஏலத்தில், நம்பர் 1 ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசனை ஒரு அணி கூட ஏலத்தில் எடுக்காத நிலையில், சுட்டி குழந்தை சாம் கர்ரானிற்காக அனைத்து அணிகளும் மல்லுக்கட்டின.வெறும் 2 கோடி ரூபாயை தனது அடிப்படை விலையாக நிர்ணயித்திருந்த சாம் கரனிற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஹைதராபாத், பஞ்சாப் அணி என பல அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டியதால் அவரது விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
கைவசம் வெறும் 19 கோடி ரூபாயை வைத்திருக்கும் சென்னை அணி எதோ ஒரு தைரியத்தில் சாம் கரனிற்காக கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் வரை கொடுக்க முன்வந்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் விடாப்பிடியாக மல்லுக்கட்டியதால் இறுதியாக சாம் கர்ரானை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.