Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் சஹாலை சாதி ரீதியாக விமர்சித்த வழக்கில் யுவராஜ் சிங் கைது!

கிரிக்கெட் வீரர் யுஷ்வேந்திர சாஹலின் சாதி குறித்து விமர்சித்தது தொடர்பாக வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை காவல் துறையினர் கைதுசெய்து, இடைக்கால ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 17, 2021 • 23:02 PM
Yuvraj Singh arrested, released on interim bail
Yuvraj Singh arrested, released on interim bail (Image Source: Google)
Advertisement

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோஹித் சர்மாவுடன் இணைந்து யுவராஜ் சிங் இன்ஸ்டாகிராமில் உரையாடும் நிகழ்ச்சியின்போது பேசிய யுவராஜ் சிங், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஷ்வேந்திர சாஹல் வெளியிட்ட டிக்டாக் வீடியோ குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசினார்.

அதில், சாஹல் சார்ந்திருக்கும் சாதி குறித்து யுவராஜ் சிங் விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. மேலும் அக்காணொலி சமூக வலைதளங்களிலும் வைரலானது. சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

Trending


இதைத்தொடர்ந்து, யுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக மன்னிப்புகோரினார். இருப்பினும், யுவராஜ் சிங் மீது ஹரியானா ஹிசர் காவல்துறையினர், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பிரிவு 3 (1), 3 (1எஸ்) உள்ளிட்ட 6 பிரிவுகளின்படி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, நீண்டநாள்களாக விசாரணையில் இருந்த நிலையில், ஹிசர் காவல் துறையினர் இன்று யுவாரஜ் சிங்கை கைதுசெய்துள்ளனர். இதையடுத்து அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதையடுத்து யுவராஜ் சிங், இந்த வழக்கில் குற்றமற்றவர் என்று கூறி, தன்மீதுள்ள வழக்குப்பதிவுகளை ரத்து செய்யக் கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement