சையத் முஷ்டாக் அலி அரையிறுதி: சரவண குமார் அபாரம்; 90 ரன்களி சுருண்டது ஹைதராபாத்!

SMAT 2021 Semi Final: Saravana Kumar's five fer helps TN restrict HYD by 90 runs
இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் நடப்பு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் இன்று நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு - ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் சரவண குமார், முருகன் அஸ்வின் ஆகியோரது பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதிலும் ஹைதராபாத் அணி தரப்பில் தியாகராஜனைத் தவிர வேறு யாரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட தொடவில்லை. இதனால் 18.3 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்களை மட்டுமே சேர்த்தது.
தமிழ்நாடு அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சரவண குமார் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News