இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?

இலங்கை vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் போட்டி - மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு?
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ளது. இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்தியாவின் வெற்றிக்கு கடைசி 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கடைசி பேட்ஸ்மேன் அதை அடிக்க முடியாமல் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன்பிறகு, இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி அரை சதம் விளாசினார், ஆனால் மற்ற வீரர்கள் மீண்டும் ஏமாற்றம் அளித்தனர். அந்த போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் என்ற இலக்கை துரத்திய போது, ஒட்டுமொத்த அணியும் 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News