
இந்திய அணியின் 'அண்டர் 17’அணிக்காக தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட அந்தச் சிறுவன் பின்னாட்களில் நட்சத்திர பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்குவார், என யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
முதலில் பேட்ஸ்மேனாக அறிமுகமான அஸ்வின் பின்னாட்களில் தனது 'கேரம்பால் யுக்தி'யின் மூலம் பல முன்னணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை சொல்லி எடுத்துள்ளார். இவரின் இத்திறமையினால் 2009 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
அதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டே தோனியின் கீ பவுலர் என்ற இலக்கை எட்டிப்பிடித்தார். 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களே ஆட்டத்தின் பவர்பிளேவில் ஓவரை வீச தயங்கிய நிலையில் ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின் பவர்பிளேவில் சகஜமாக தனது ஓவர்களை வீசியது மட்டுமில்லாமல் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.