
கரோனா தொற்று பரவல் ஐபிஎல் தொடரை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கலை உருவாக்கியது. அதனால் எஞ்சியுள்ள லீக் போட்டிகள் அனைத்தையும் மும்பை மைதானத்திற்கு மாற்ற பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத் வீரர் சஹாவுக்கும், டெல்லி வீரர் அமித் மிஸ்ராவுக்கு கரோனா தொற்று உறுதியானது.
பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு அடுத்தடுத்து தொற்று உறுதியானதால் ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் எழுந்தது. தொடர் முழுவதும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்த சூழலில் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி நடப்பாண்டு ஐபிஎல் சீசனை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். தேதி எதுவும் குறிப்பிடப்படாமல் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், லீக் போட்டிகள் அனைத்தும் நடைபெறுமா? அல்லது வேறு ஏதேனும் திட்டத்தை பிசிசிஐ கையாளுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.