
இந்தியா முழுவதும் கரோனாவின் கோர பிடியில் சிக்கியிருக்கும் நிலையிலும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் பயோ பபுள் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.9ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்தொடரின் இறுதிப்போட்டி ஏப்.30ஆம் தேதி நடக்கவுள்ளது.
ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே அனைத்து வீரர்களும் தங்கும் விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அணியின் பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். எனினும் இந்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே டெல்லி அணி வீரர் அக்ஷர் பட்டேலுக்கும், கொல்கத்தா அணி வீரர் நிதிஷ ராணாவுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் தொற்றிலிருந்து குணமடைந்த பிறகு போட்டிகளில் பங்கேற்க தொடங்கினர்.
இதே போல ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே ஆர்சிபி அணியின் தொடக்க வீரர் தேவ்தத் பட்டிகல்லுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் குணமடைந்த செய்தி வந்து சேர்வதற்குள் அந்த அணியின் மற்றொரு வீரரான டேனியல் சாம்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். ஆனால் தற்போது இருவரும் குணமடைந்து அணியுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.