சேலஞ்சர் கோப்பை: ஜீவன் - ஸ்ரீராம் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்!
சேலஞ்சர் கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி தகுதி பெற்றது.
ஈகுவடாரில் ஆடவருக்கான சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீராம் பாலாஜி ஜோடி , ஈகுவடாரின் ஆன்டனியோ கெயேட்டனோ, பிரேசிலில் ரெய்ஸ் டா சில்வா ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் செட்டை இந்திய அணி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி டா சில்வா இணைக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்ற போதும், இந்திய ஜோடி 7–6 என கைப்பற்றியது.
இதன்மூல ஆட்டநேர முடிவில் இந்திய ஜோடி 6–2, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
Win Big, Make Your Cricket Tales Now
Latest Sports News