
இந்தியாவில் புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது இதில் நேற்று ஆஹ்மதாபாத்தில் நடந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளைப் பெற்று அசத்தியது. இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாட்னா அணி 28 - 16 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட பாட்னா அணி அடுத்தடுத்து புள்ளிகளைப் பெற, மறுபக்கம் தலுங்கு டைட்டன்ஸ் அணி தடுமாறியது. இதனை சரியாக பயன்படுத்திய பாட்னா அணி இறுதிவரை அபாரமாக செயல்பட்டு 50-28 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
அதேபோல் நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் யுபி யோத்தாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஏற்கனவே விளையாடிய முதல் போட்டியில் தோல்வியை தழுவிய யுபி யோத்தாஸ் அணி, தனது இரண்டாவது போட்டியான இன்று ஹரியானா அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.