Advertisement

ஐஎஸ்எல் 2023: சென்னையின் எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி போட்டி டிரா!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற சென்னையின் எஃபை - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான போட்டி டிராவில் முடிவடைந்தது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 08, 2023 • 13:04 PM
Chennaiyin FC fight back to hold Jamshedpur FC 2-2
Chennaiyin FC fight back to hold Jamshedpur FC 2-2 (Image Source: Google)

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று சென்னையின் எஃப்சி – ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் மோதின. ஜாம்ஷெட்பூரில் உள்ள ஜேஆர்டி டாடா விளையாட்டு வளாகத்தில் இப்போட்டி நடைபெற்றது.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோலடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். இதில் ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ரித்விக் தாஸ் கோலடித்து அசத்தினார். ஆனால் சென்னை அணி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகின. இதனால் முதல் பாதி ஆட்டம் முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தின் 56ஆவது நிமிடத்தில் மீண்டும் ரித்விக் தாஸ் கோல் அடிக்க ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நம்பிக்கை தளராமல் துடிப்புடன் விளையாடிய சென்னையின் எஃப்சி அணிக்கு 60ஆவது நிமிடத்தில் வின்சி பாரெட்டோ கோலடித்தார்.

தொடர்ந்து அட்டாக்கின் ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு 68ஆவது நிமிடத்தில் பீட்டர் ஸ்லிஸ்கோவிக்கும் கோல் அடித்து அசத்தியதால் போட்டி 2-2 என்ற கணக்கில் தொடர்ந்தது. பின்னர் இரு அணிகளும் எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதனால் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களுடன் இருந்ததால் இப்போட்டி டிராவில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 4 வெற்றி, 3 டிரா, 5 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஜாம்ஷெட்பூர் 13 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 டிரா, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று 10அவது இடம் வகிக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement