
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணியை எதிர்த்து துனிஷியா அணி மோதியது. ஏற்கனவே பிரான்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியதால், நட்சத்திர வீரர்களான எம்பாப்பே மற்றும் கிரீஸ்மேன் ஆகியோர் தொடக்கத்தில் களமிறங்கவில்லை.
அதேபோல் துனிஷியா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தினால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தது. இதனால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஆட்டம் தொடங்கிய 8வது நிமிடத்திலேயே துனிஷியா அணியின் கான்த்ரி முதல் கோல் அடித்தார்.
ஆனால் அதனை நடுவர்கள் ஆஃப் சைடாக அறிவித்து கோலை திரும்ப பெற்றனர். தொடக்கம் முதலே துனிஷியா அணி அட்டாக் செய்ததோடு, தடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டது. அதேபோல் பிரான்ஸ் அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.