Advertisement
Advertisement
Advertisement

ஃபிஃபா உலகக்கோப்பை 2022: அடுத்தடுத்து கோல் மழை பொழிந்த வேலன்சியா; ஈக்வடார் அபார வெற்றி!

கத்தார் அணிக்கெதிரான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ஈக்வடார் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan November 21, 2022 • 10:20 AM
FIFA World Cup: Ecuador Beats Host Qatar 2-0 In Tournament Opener
FIFA World Cup: Ecuador Beats Host Qatar 2-0 In Tournament Opener (Image Source: Google)

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடர் கத்தாரில் நேற்று தொடங்கியது. உலகக்கோப்பையை நடத்தும் அணி தனது முதல் போட்டியில் இதுவரை தோற்றதே இல்லை. அந்த வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறது கத்தார். 

அதன்படி நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் கத்தார் - ஈக்வடார் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தின் 5, 15, 31 ஆகிய நிமிடங்களில் மொத்தம் 3 கோல்கள் அடிக்கப்பட்டன. இந்த மூன்று கோலையும் அடித்தவர் ஈக்வடார் கேப்டன் என்னர் வேலன்சியா. ஆனால் இதில் முதல் கோல் ஆஃப்சைடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த இரண்டையும் வேலன்சியா பக்காவாக கோலாக மாற்றிக் காட்டினார். அதிலும் ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் பாக்ஸுக்குள் நுழைந்த வேலன்சியாவின் கால்களை கத்தார் கோல்கீப்பர் அல்ஷீப் தட்டி விட மஞ்சள் அட்டை உடன் பெனால்டியும் வழங்கப்பட்டது.

அதை மிக எளிதாக வேலன்சியா கோலாக்கினார். அதன்பின் ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து ஏஞ்சலோ பிரசியடோ பாக்ஸுக்குள் பாலை தட்டி விட, அதை ஹெட்டர் மூலம் வேலன்சியா கோலாக மாற்றினார். இதனால் மஞ்சள் நிற படை மைதானம் முழுவதும் ஆர்ப்பரிக்க ஈக்வடார் வெற்றி வாசலுக்குள் நுழைந்தது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால் உலகக்கோப்பை தொடரில் ஈக்வடார் சார்பில் அடிக்கப்பட்ட கடைசி 5 கோல்களும் என்னர் வேலன்சியா அடித்தது.

கடைசியாக 2014 உலகக்கோப்பை தொடருக்கு அந்த அணி தகுதி பெற்றிருந்தது. அப்போது சுவிட்சர்லாந்து 1 (2014), ஹூண்டுராஸ் 2 (2014) என மூன்று கோல்களை அடிக்க, நடப்பு தொடரில் கத்தார் உடன் 2 கோல் மழை பொழிய எண்ணிக்கை 5ஆக மாறியது. இதன்மூலம் இந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மட்டுமின்றி கால்பந்து ரசிகர்கள் மனதையும் வென்றிருக்கிறார் என்னர் வேலன்சியா.

ஈக்வடார் கால்பந்து அணி வரலாற்றில் இரண்டாவது முறை ஒன்றுக்கு மேற்பட்ட கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை வேலன்சியா தட்டிச் சென்றார். அதுமட்டுமின்றி 2022 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் முதல் கோல் அடித்த வீரர் என்ற சாதனையையும் பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயமும் இருக்கிறது.

பெனால்டி ஷூட் அவுட் மூலம் முதல் கோல் அடிக்கப்பட்ட உலகக்கோப்பை என்ற சாதனையை கத்தார் உலகக்கோப்பை பெற்றிருக்கிறது. பல லட்சம் கோடிகள் செலவு செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த கத்தார், தனது முதல் ஆட்டத்தில் கோட்டை விட்டு விட்டது. இதுவரை உலகக்கோப்பை தொடரை நடத்திய நாடுகளில் மிகவும் பலவீனமாக நாடு என்ற அடையாளத்தையும் கத்தார் பெற்றிருக்கிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement