
கடந்த 2010இல் நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி போட்டியில் கானா - உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. கானா அணி முன்னிலை பெறும் நேரத்தில் அடித்த கோலை, உருகுவே அணி வீரர் சுவாரஸ் கைகளால் தடுத்து நிறுத்தினார். இதனால் அவருக்கு ரெட் கார்ட் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பென்லாடி ஷூட் அவுட் வாய்ப்பில் வெற்றிபெற்று உருகுவே அணி அரையிறுதிக்கு முன்னேறியது. கானா அணி பெனால்டி வாய்ப்பில் கோல் அடிக்க முடியாததை பெஞ்ச்சில் அமர்ந்து சுவாரஸ் கொண்டாடி கொண்டு இருந்தார். அன்று முதல் ஹேண்ட் ஆஃப் தி டெவில் என்று வாக்கியம் கால்பந்தில் உருவாகியது.
இதற்கு பதிலடி கொடுக்க கானா அணி சுமார் 12 ஆண்டுகளாக காத்திருக்கிறது. அதற்கேற்ப உலகக்கோப்பை குரூப்-ல் கானா, உருகுவே அணிகள் ஒன்றாக இருந்தன. இதனால் உலகக்கோப்பைத் தொடர் தொடங்கிய நாளில் இருந்தே கானா - உருகுவே அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.