Advertisement
Advertisement
Advertisement

பிரஞ்சு ஓபன்: காலிறுதி வாய்ப்பை இழந்தனர் கிடாம்பி, பிரானாய்!

பிரெஞ்சு ஓபன் பாட்மின்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் இரண்டாம் சுற்றோடு வெளியேறினார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 29, 2022 • 14:40 PM
French Open 2022: Kidambi Srikanth and HS Prannoy crash out
French Open 2022: Kidambi Srikanth and HS Prannoy crash out (Image Source: Google)

அந்த இந்திய ஜோடி தங்களது காலிறுதியில் 23-21, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் டகுரோ ஹோகி/யுகோ கோபயாஷி கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. 

இதையட்த்து அரையிறுதியில் தென் கொரியாவின் சோய் சோல் கியு/கிம் வோன் ஹோ கூட்டணியை எதிா்கொள்கிறது சாத்விக்/சிரக் இணை.

இதனிடையே ஒற்றையா் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 21-19, 12-21, 19-21 என்ற கேம்களில் டென்மாா்க்கின் ராஸ்மஸ் கெம்கேவிடம் தோல்வியைத் தழுவி காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார்.

அதேபோல், ஹெச்.எஸ்.பிரணாயும் 19-21, 22-20, 19-21 என்ற கேம்களில் சீனாவின் லு குவாங் ஸுவிடம் தோல்வியடைந்து இரண்டாம் சுற்றோடு வெளியேறினார். 

அதன்பின் நடபெற்ற சமீா் வா்மாவும் 18-21, 11-21 என்ற கேம்களில் தாய்லாந்தின் குன்லாவத் விதித்சாரனிடம் தோல்வியடைந்து காலிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement