Advertisement
Advertisement
Advertisement

இந்த விருதை மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - கரீன் பென்சிமா!

நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் (Ballon d'Or) விருதை வென்ற பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரீம் பென்சிமா, இந்த விருதை மக்களுக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். 

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan October 18, 2022 • 15:40 PM
"He's my idol and everyone knows we'll never see anyone like him again" - Karim Benzema (Image Source: Google)

ஒவ்வொரு ஆண்டும் கால்பந்தாட்ட உலகில் சிறந்து விளங்கும் வீரருக்கு பாலன் டி ஓர் விருது வழங்கப்டுகிறது. கடந்த ஆண்டுக்கான விருதை மெஸ்ஸி வென்றார். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருது அறிவிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டுக்கான விருதை வெல்லும் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆடவர் பிரிவில் மொத்தம் 30 கால்பந்தாட்ட வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். அதில் கரீம் பென்சிமா, லெவோண்டஸ்கி, கெவின் டி ப்ரூய்ன், முகமது சாலா ஆகிய வீரர்கள் விருதை வெல்லும் பேவரைட் வரிசையில் இருந்தனர்.

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பாலன் டி ஓர் விருதை பிரான்ஸ் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கரிம் பென்சிமா வென்றுள்ளார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி, சாம்பியன்ஸ் லீக் மற்றும் லா லீகா தொடர்களை வென்றது. அந்த அணிக்காக விளையாடிய அவர் 46 போட்டிகளில் 44 கோல்களை பதிவு செய்திருந்தார்.

விருது பெற்றபின் பேசிய கரீம் பென்சிமா, “இந்த விருதை வெல்ல வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது உண்டு. ஆனால் 30 வயதை கடந்த பிறகு அது லட்சியமாக மாறியது. அதை எனது தலைக்குள் ஏற்றிக் கொண்டேன். நான் சொல்லும் லட்சியம் கடினமாக உழைப்பது. எனது அணிக்கு தலைவனாக இருப்பதிலும், ரியல் மாட்ரிட் அணியில் விளையாடுவதும் நான் பெற்ற பாக்கியம். கடினமான தருணங்களை கடந்து வந்துள்ளேன். 

என்னோடு கிளப் அணியில் விளையாடும் வீரரர்கள், அவர்களது நாட்டுக்காகவும் விளையாடி வந்தனர். ஆனால் நானோ அந்நேரத்தில் கிளப் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தேன். களத்தில் எனது உழைப்பை எண்ணி மகிழ்கிறேன், பெருமை கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement
Advertisement