
இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னையின் எஃப்சி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தினர்.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்கள் கோலடிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். மாறி மாறி கோல் பகுதியை முற்றுகையிட்டனா். இதன் பலனாக முதல் பாதியில் 34ஆவது நிமிடத்தில் சென்னை வீரா் பீட்டா் ஸ்லிஸ்கோவிச் அற்புதமாக கோலடித்தாா். ஜூலியஸ் டக்கா் பாஸை அருமையாக பயன்படுத்தி கோலடித்தாா் ஸ்லிஸ்கோவிச்.
எனினும் சென்னை அணியின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஆட்டத்தின் 38ஆவது நிமிடத்தில் மும்பை வீரா் லாலியன்ஸுலா சாங்டே தனது அணியின் முதல் கோலை அடித்தாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.