
22ஆவது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த கால்பந்து வீரர்களான கிறிஸ்டியானா ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் இதுவே கடைசி உலக கோப்பை என்பதால் அவர்கள் அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க முனைவார்கள் என்பதால் அவர்கள் மீதும் அவர்களது அணிகள் மீதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த உலக கோப்பையில் அர்ஜெண்டினா அணி அதன் முதல் போட்டியில் சிறிய அணியான ஐக்கிய அரபு அமீரகத்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. அந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி மட்டுமே அர்ஜெண்டினா அணிக்கு ஒரு கோல் அடித்தார். மற்ற வீரர்கள் யாருமே கோல் அடிக்காததால் 2-1 என என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா தோற்றது.
2ஆவது போட்டியில் நேற்று மெக்ஸிகோவை எதிர்கொண்ட அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இந்த உலக கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி மற்றும் ஃபெர்னாண்டஸ் ஆகிய இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர்.