
கத்தாரில் நடைபெற்றுவரும் 22ஆவது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணியும், ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இந்த இரு அணிகலூக்கும் இடையேயான இந்த ஆட்டம் , ஒரு போர்க்களத்தில் படை வீரர்கள் மோதுவது போல் . ஆட்டம் எதோ கால்பந்து தான், ஆனால் மல்யுத்தம் போட்டி போல் வீரர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும், தாக்கி கொண்டும் இருக்கிறாகள். மேலும் போட்டி கீழே விழும் வீரர்களும் ஆஸ்கார் விருது வாங்குவது போல் நடித்து மிரட்டுகிறார்கள்.
போட்டி தொடங்கியதில் இருந்தே இரு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடியதால் அனல் பறந்தது. போட்டி தொடங்கி 2 நிமிடத்திற்குள் 6 பௌல்கள் நடைபெற்றது. இதனால் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதிலும் ஆட்டத்தின் 8ஆவது நிமிடம் கிடைத்த கோல் வாய்ப்பை அர்ஜென்டினா வீணடித்தது