
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாக் அவுட் சுற்று போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றின் இரண்டாவது போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாடியது.இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி முக்கிய வீரர் டீ மரியாவை களமிறக்கவில்லை.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே அர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. ஆனால் அர்ஜென்டினா அணியின் பலத்தை கணித்து ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அர்ஜென்டினா அணி கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனிடையே மெஸ்ஸிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் அதிக தொல்லையை ஏற்படுத்தினர். இதன் காரணமாக 34ஆவது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு, ஃபிரீ கிக் வாய்ப்பு கிடைத்தது.
ஃபீரி கீக் வாய்ப்பில் பந்தை பாஸ் செய்து, மீண்டும் பாக்ஸ் பகுதிக்குள் சென்று 6 வீரர்களை கடந்து மெஸ்ஸி கோல் அடித்தார். இதுவரை 5 உலகக்கோப்பைப் போட்டியில் விளையாடியுள்ள மெஸ்ஸியின், முதல் நாக் அவுட் கோல் இதுவாகும். இதன் மூலம் மெஸ்ஸியின் நாக் அவுட் சாபம் முடிவுக்கு வந்தது. அதேபோல் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. அதன் பின்னர் முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.