
PKL 2022: Puneri Paltan will play their 1st Final on December 17! (Image Source: Google)
ஒன்பதாவது புரோ கபடி லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்று முன்தினம் இந்த தொடருக்கான நாக்-அவுட் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக அரங்கேறியது. இந்த நிலையில், இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ளன. இந்த ஆட்டங்களிலும் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், மும்பையில் இன்று இரண்டு அரைஇறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில், இரவு 7.30 மணிக்கு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.
இரவு 8.30 மணிக்கு தொடங்கிய 2ஆவது அரைஇறுதியில் அஜிங்யா பவார் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, பாசெல் அட்ராசலி தலைமையிலான புனேரி பால்டனை எதிர்கொள்கிறது.