
புரோ கபடி லீக் போட்டி 9ஆவது சீசன் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் 12 அணிகள் பங்கேற்றன. இந்த புரோ கபடி லீக் போட்டியில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. லீக் முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளி), புனேரி பால்டன் (80 புள்ளி) ஆகிய அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று நேரடியாக அரைஇறுதியில் விளையாடுகின்றன.
இதே போல் 3ஆவது இடத்தை பெங்களூரு புல்சும் (74 புள்ளி), 4ஆவது இடத்தை யு.பி. யோதாஸும் (71 புள்ளி), 5ஆவது இடத்தை தமிழ் தலைவாஸும் (66 புள்ளி), 6ஆவது இடத்தை நடப்பு சாம்பியன் தபாங் டெல்லியும் (63 புள்ளி) பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு வந்துள்ளன.
பிளே-ஆப் சுற்று மும்பையில் இன்று தொடங்கியது. இன்று (டிசம்பர் 13) நடக்கும் எலிமினேஷன் சுற்று ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகளும், தமிழ் தலைவாஸ்- யு.பி. யோதாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு செல்லும். தோல்வி அடையும் அணி இந்த சீசனில் இருந்து வெளியேறும்.