
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் குரூப் சி பிரிவில் உள்ள சவுதி அரேபியா அணியை எதிர்த்து மெக்சிகோ அணி விளையாடியது. சவுதி அரேபியா அணி முதல் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி ஆச்சரியம் கொடுத்த நிலையில், அடுத்த போட்டியில் போலாந்து அணியுடன் தோல்வியை சந்தித்தது.
அதேபோல் மெக்சிகோ அணி போலாந்து அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தும், அர்ஜென்டினா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தும் இந்த போட்டியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால், ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமான இருந்தது.
இந்த ஆட்டம் தொடங்கியது முதலே சவுதி அரேபியா அணி வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதனை மெக்சிகோ அணியின் தடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினர். சவுதி அரேபியா அணி தொடர்ந்து ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், முதல் பாதியின் சில நிமிடங்களிலேயே இரு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.