Advertisement

மலேசியா ஓபன் 2023: சாய்னா, ஸ்ரீகாந்த் அதிர்ச்சி தோல்வி!

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினர்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan January 11, 2023 • 12:07 PM
Saina Nehwal, Kidambi Srikanth Make First Round Exits From Malaysia Open
Saina Nehwal, Kidambi Srikanth Make First Round Exits From Malaysia Open (Image Source: Google)

மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் கோலாலம்பூரில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால், சீனாவின் ஹன் யூவை எதிர்த்து விளையாடினார்.

இப்போட்டியின் தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்திய ஹன் யூ முதல் செட்டை 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சாய்னா நேவால் இரண்டாவது செட்டை 21-17 என கைப்பாற்ற ஆட்டத்தின் பரபரப்பு அதிகரித்தது.

அதன்பின் நடைபெற்ற மூன்றாவது செட் ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஹன் யூ 21-14 என்ற கணக்கில் கைப்பற்றி, 21-12,17-21, 21-12 என்ற செட் கணக்கில் சாய்னா நேவாலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

அதேபோல் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையரில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் கிடாம்பி, ஜப்பானின் கெண்டோ நிஷிமோடோவை எதிர்கொண்டார். இப்போட்டியின் நிஷிமோடோ 21-19, 21-14 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 

மகளிர் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-19, 21-14 என்ற நேர் செட்டில் ஹாங்காங்கின் யேங் நிகா டிங்- யேங் புய் லாம் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

இதையடுத்து இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து, முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரினுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Advertisement