Advertisement

யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை - அனுராக் தாக்கூர்!

டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து பாகிஸ்தான் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் பதில் கொடுத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 20, 2022 • 20:09 PM
'No one can ignore India': Sports minister Thakur reacts to Pakistan's threat of pulling out of 2023
'No one can ignore India': Sports minister Thakur reacts to Pakistan's threat of pulling out of 2023 (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை தொடர் குறித்து ஜெய் ஷா சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அடுத்தாண்டு ஆசிய கோப்பை தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என அறிவித்திருந்தார்.

பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கிறார். இதுகுறித்து பேசியிருந்த அவர், பாகிஸ்தானில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதால், இந்திய அணி அங்கு செல்லாது என்றும், ஆசிய கோப்பை தொடரை வேறு ஒரு பொதுவான இடத்தில் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தார். இதனை கேட்ட பாகிஸ்தான் வாரியம் கடும் எச்சரிக்கையை விடுத்தது.

Trending


இதுகுறித்து அந்நாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஒருவேளை இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்லாது. இதே போல ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், கவுன்சிலில் இருந்து விலகிவிடுவோம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில், “விளையாட்டு துறையில் மிக முக்கியமான இந்தியாவில், பல உலகக்கோப்பைகள் நடந்துள்ளன. இதே போல அடுத்தாண்டும் இந்தியாவில் உலகக்கோப்பை நடைபெறும். இதில் அனைத்து நாடுகளும் பங்கேற்பார்கள். பாகிஸ்தானும் இதில் கலந்துக்கொண்டே தீரும். ஏனென்றால் யாரின் பேச்சையும் கேட்டு நடக்க வேண்டிய இடத்தில் இந்தியா இல்லை.

இந்தியா - பாகிஸ்தான் ஆசியக்கோப்பை மற்றும் ஐசிசி தொடர்களில் மோதுவதால் தான் ஐசிசிக்கு நல்ல வருமானம் வருகிறது. இப்படிபட்ட போட்டி நடைபெறவில்லை என்றால் பெரிய இழப்பாக இருக்கும். பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் என்பது உள்துறை அமைச்சகத்தின் முடிவாகும். வீரர்களின் பாதுகாப்பை மட்டுமே முதன்மையாக வைத்திருப்போம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே இதனை பெரிய பிரச்சினையாக செய்யக்கூடாது. ஒருவேளை பாகிஸ்தான் பிரச்சினை செய்தால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு இந்தியா - பாகிஸ்தான் மோதல் இருக்காது” என கூறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement