Bharath arun
ஐபிஎல் 2022: பரத் அருணை பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்தது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடரில் லக்னோ, அகமதாபாத் ஆகிய நகரங்களை மையமாகக் கொண்டு இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனால் நடப்பு சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறவுள்ளது. மேலும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களுக்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.