Advertisement

ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து மேலும் இருவருக்கு கரோனா உறுதி!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியைத் தொடர்ந்து, பந்துவீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 06, 2021 • 15:42 PM
Ravi Shastri, Bharat Arun and Sridhar return positive RT-PCR test results
Ravi Shastri, Bharat Arun and Sridhar return positive RT-PCR test results (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது போட்டியும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரிக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். 

Trending


மேலும் அவருடன் தொடர்பில் இருந்த பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இதையடுத்து இவர்கள் மூவருக்கும் இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா கண்டறிதல் பரிசோதனையில், மூன்று பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து மூவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

மேலும் இவர்கள் மூவராலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கமுடியாது. இது இந்திய அணி வீரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement