Advertisement
Advertisement

Charith asalanka

வெல்லலாகே, தனஞ்செயா, அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் - தசுன் ஷனகா!
Image Source: Google

வெல்லலாகே, தனஞ்செயா, அசலங்கா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர் - தசுன் ஷனகா!

By Bharathi Kannan September 13, 2023 • 12:55 PM View: 263

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றின் நான்காவது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் நேற்று விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது

முன்னதாக டாஸ் வென்று முதலில் விளைடாடிய இந்திய அணியினர் 49.1 ஓவர்களில் 213 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 53 ரன்களும் கேஎல் ராகுல் 39 ரன்களும் இஷான் கிஷன் 33 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் அந்த அணியின் இளம் ஆல் ரவுண்டர் வெல்லலாகே சிறப்பாகப் பந்து வீசி 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Cricket News on Charith asalanka