Chennai super kings
கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கியது குறித்து மனம் திறக்கும் புஜாரா!
இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என அழைக்கப்படுபவர் சட்டேஷ்வர் புஜாரா. அதிலும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போல பொறுமையின் சிகரமாக எவ்வளவு வேகத்தில் பந்து வீசினாலும் அப்படியே தடுத்து நிறுத்தி அதிகப்படியான பந்துகளை எதிர்கொண்டு பவுலர்களை களைப்படைய வைத்து ரன்களை சேர்க்கும் ஸ்டைலை கொண்டுள்ள அவர் உலகத்தரம் வாய்ந்த டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார்.
கடந்த 2018/19இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் விராட் கோலி தலைமையில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 70 வருடங்களில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தொடரை வென்று சரித்திரம் படைத்தது. அந்த வெற்றிக்கு 500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய புஜாரா அதன்பின் 2 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தடுமாறினார்.