Chintan gaja
போட்டியின் நடுவே காயமடைந்த வெங்கடேஷ் ஐயர்; மைதானத்தில் பரபரப்பு!
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் மேற்கு மண்டலம் அணிகளும், மத்திய மண்டல அணிகளும் கோவையில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற மத்திய மண்டல அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து மேற்கு மண்டல அணியின் தொடக்க வீரராக பிரித்வி ஷா, ஜெய்ஷவால் ஜோடி களமிறங்கினர்.
இதில், ஜெய்ஷ்வால் டக் அவுட்டாக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராகுல் திரிபாதி பொறுமையாக விளையாடி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவருக்கு அர்மான் ஜாபர் 23 ரன்கள் எடுத்து கம்பெனி கொடுத்தார்.