Chris gayle
ஐபிஎல் 2021: வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்; சமாளிக்குமா பிசிசிஐ?
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் போட்டி அட்டவணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் நடைபெறும் தினத்தில் வெஸ்ட் இண்டீசின் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர் நடைபெறும் என்பதால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டத்தில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.