Covid positve
ஆசிய கோப்பை 2023: இலங்கை வீரர்களுக்கு கரோனா உறுதி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ மற்றும் விக்கெட் கீப்பர் குசல் பெரேரா ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை 2023 தொடர் தொடங்க உள்ள நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நடப்புச் சாம்பியனான இலங்கை, ஆசியக் கோப்பை 2023க்கான தங்களது அணியை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில், சீனியர் வீரர் குசல் பெரேரா அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தசுன் ஷனாகா தலைமையிலான இலங்கை அணி சொந்த நாட்டில் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவது இலங்கைக்கு கூடுதல் நன்மையை பெற்றுத் தரும்.