Dhananjaya de silva
சதமடித்து அசத்திய குசால் பெரேரா; வங்கதேசத்திற்கு 287 ரன்கள் இலக்கு!
இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் குசால் பெரேரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க வீரர்கள் குசால் பெரேரா - குணத்திலக இணை அதிரடியான தொடக்கத்தை தந்தது. இதனால் முதல் 10 ஓவர்களிலேயே இலங்கை அணி 77 ரன்களை குவிந்திருந்தது.