Dinesh karthik
அஸ்வினுக்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்; வைரல் காணொளி!
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் 2022 சூப்பர் 12 சுற்றின் 4ஆவது லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் ஓபனர்கள் முகமது ரிஸ்வான் 4 (12), பாபர் அசாம் 0 (1) ஆகியோர் சொதப்பிய நிலையில், அடுத்து ஷான் மசூத் 52, இஃப்திகார் அகமது 51 ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். மற்ற பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் எடுத்த நிலையில், இறுதியில் ஷாஹீன் அப்ரீதி 16 ரன்களை சேர்த்து அசத்தினார். இதனால், பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 159/8 ரன்களை சேர்த்தது.