Advertisement
Advertisement

Fabian allen

ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!
Image Source: Google

ஃபேபியன் ஆலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை; கேள்விக்குறியாகிய வீரர்கள் பாதுகாப்பு!

By Bharathi Kannan February 06, 2024 • 12:28 PM View: 137

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் முதலாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களை பிடித்திள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதைத்தொடர்ந்து நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் இத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நட்சத்திர ஆல் ரவுண்டர் ஃபேபியன் ஆலன், பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் பங்கேற்பதற்பாக நேற்றைய தினம் ஜொஹன்னஸ்பர்க்கிற்கு சக அணி வீரர்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் ஜொஹ்ன்னஸ்பர்க்கில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு அருகில் அடையாளம் தெரியாத நபர்கள் ஃபேபியன் ஆலனை வழிமறித்து துப்பாக்கி முனையில் அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போன் உள்ளிட்ட போருட்களை கொள்ளையடித்துள்ளனர். 

Related Cricket News on Fabian allen