India vs austra
டெஸ்ட் போட்டிகள் ஏன் மூன்று நாளில் முடிவடைகிறது - அஸ்வினின் பதில்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியா விளையாடிய முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்றே நாட்களில் முடிவடைந்து விட்டது. இதன் காரணமாக பல்வேறு ரசிகர்கள் போட்டியை 5 நாட்கள் முழுமையாக காண முடியவில்லை என்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தனது யூடியூப் சேனலில் பேசி உள்ள அஸ்வின், விமானத்தில் ரசிகர் ஒருவர் தம்மிடம் டெஸ்ட் போட்டி ஏன் மூன்று நாட்களில் முடிவடைகிறது என்று அவரது ஏமாற்றத்தை தன்னிடம் பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
அதற்கு தாம் 3 காரணங்களை அவருக்கு கூறியதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். அதில், “பேட்ஸ்மேன்களின் மனநிலை தற்போது மாறிவிட்டதே போட்டிகள் சீக்கிரமாக முடிவடைவதற்கு காரணமாக உள்ளது. இப்போதெல்லாம் ஆட்டம் வேகமாக செல்ல வேண்டும் என பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்கிறார்கள். தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்கள் கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டு பிறகு ரன் சேர்க்கும் முறையை விரும்புவதில்லை.