Ipl 2022 auction
ஐபிஎல் மெகா ஏலம் 2022: ரூ.14 கோடிக்கு தீபக் சஹாரை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
ஐபிஎல் 15வது சீசனுக்கான ஏலத்தில் யார் யாரை எடுக்க வேண்டும் என்ற பக்கா திட்டத்துடன் வந்த சிஎஸ்கே அணி, தங்கள் அணியில் ஏற்கனவே ஆடிய, ஆனால் தக்கவைக்க முடியாமல் விடுவித்த வீரர்களை குறிவைத்தே ஏலத்தில் எடுத்தது.
அம்பாதி ராயுடுவை ரூ.6.75 கோடிக்கும், டுவைன் பிராவோவை ரூ.4.40 கோடிக்கும், ராபின் உத்தப்பாவை ரூ.2 கோடிக்கும் எடுத்த நிலையில், ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை மற்ற அணிகளுடன் போட்டி போட்டு ரூ.14 கோடிக்கு எடுத்தது.