Jonny bairstow
இவர்கள் இருவரும் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்படுவார்கள் - ஜோ ரூட் கணிப்பு!
இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்க இருக்க உலகக் கோப்பை நெருங்க நெருங்க, ரசிகர்களை தாண்டி வீரர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கிறது. இந்த முறை இந்தியாவில் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கின்ற காரணத்தினால், ஆசிய துணை கண்டத்தைச் சேர்ந்த நாடுகளின் அணி வீரர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வகையில் சில குறிப்பிட்ட முன்னாள் வீரர்கள் பங்களாதேஷ் அணியை எடுத்துக்காட்டி, அவர்கள் இந்த உலகக் கோப்பை தொடரில் யாரையும் வீழ்த்தக்கூடிய அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அணியாக இருப்பார்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலும் இந்தியாவில் நடக்க இருக்கும் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிக்கக்கூடிய வீரர்களாக விராட் கோலி, பாபர் அசாம் இருக்கலாம் என்று நிறைய முன்னாள் வீரர்கள் கணித்திருந்தார்கள்.